Monday, April 2, 2007

I Miss You SoMuch !

கொஞ்சம் நாள் என்
அம்மாவை
பிரிந்திருந்த
ரணத்தின் பதிவு இது.
அம்மா!
உன்னைப்
பிரிந்திருந்த அந்த
சில நாட்களில்
நான் இழந்தது
எத்தனையோ!
இன்னும் நான்
மீளவில்லை அந்த
பிரிவின்
துயரிலிருந்து
உன்னிடம் வந்து
சேர்ந்த பின்னும்.
எதைச் சொல்வேன்?
எதைவிடுவேன்?
நிச்சயம் நான்
பைத்தியமாகவே
ஆனேன்.
இன்னுமொரு பிரிவினை
நிச்சயம் என்னால்
தாங்க முடியாது.
இனியொரு
பிரிவென்றால் அது
உயிரின் பிரிவாக
இருக்கட்டும்.

1 comment:

rahini said...

இனியொரு
பிரிவென்றால் அது
உயிரின் பிரிவாக
இருக்கட்டும்

பிரிவு என்பது ஒரு நிம்மதியற்ற காலம்தான் அதுவும் தாய் தந்தையின் பிரிவு கொடுமை இதன் பிரிவில் நானும் தத்தளிக்கின்றேன் அவர்களின் மரணத்தை கண்டு.