Monday, April 23, 2007

எங்ஙனம்?-பரிசு பெறாத கவிதை



வியக்கும் விழிகளின்
உட்புகுந்து, உறவுகலினூடே
தனித்திருக்கச் செய்தது
எங்ஙனம்?
பார்வையின் வெம்மையில்
கற்பனை உறவில்
தகித்திருக்கச் செய்தது
எங்ஙனம்?
உற்சாக பொழுதுகளில்
உழன்றிருக்கச் செய்ததும்,
கவலைப் பொழுதிலும்
கற்பனையில்
மகிழ்ந்திருக்கச் செய்ததும்
சாத்தியமானது
எங்ஙனம்?
உண்ணா நோன்பும்,
உறங்கா மாண்பும்
எனையறியாமலேயே
ஏற்றிருக்கச் செய்தது
எங்ஙனம்?
காண்பனவற்றிலும்,
களிப்பனவற்றிலும்,
சுவைப்பனவற்றிலும்
காணும் உட்பொருளாய்
கலந்திருந்து
மனதில் வாசம் கொண்ட
மலரே -- எனை விடுத்து
மண்ணில் உறங்கிட
சம்மதித்தது
எங்ஙனம்?

No comments: