Monday, April 23, 2007

"காதலித்தாக வேண்டும்..!"

காதல்...
உருகிடும் ஜோதியல்ல...
உருக்கிடும் ஜோதி!
செதுக்கப்படும் சிற்பமல்ல...
சிதைத்திடும் வெப்பம்!
காத்திருத்தலில்
பொறுமையைக்
கற்றுக்கொடுத்தாலும்...
காணாத பொழுதினில்
வெறுமையில்
தத்தளிக்க வைத்திடும்!
அகத்திற்கு
ஆறுதல் அளித்திட்டாலும்...
அறிவிற்கு
ஊறு விளைவித்திடும்!
ஆயினும்
என் செய்வேன்?
நான் காதலித்தாக வேண்டுமே!
மனக்குட்டையை
குழப்பி விட்டலும்...
வேதனை ஊற்றில்
கவிதை முத்தெடுக்க
உதவும் காதலை
நான் காதலித்தாக வேண்டுமே!
கவலைகளை
சூடிக்கொள்ள அல்ல...
வேதனைகளை
நாடிச்செல்லவும் அல்ல...
சோதனைகளை
தாங்கிக்கொள்ளவும் அல்ல..!
என் உள்ளத்தை
மகிழ்விக்க...
என் வழ்வை சுவைக்க...
என் கவிதை வரிகளில்
திளைத்திருக்க...
என்று எல்லாமே
சுயநலமாக இருந்தாலும்
நான் காதலித்தாக வேண்டுமே..!
நானும்,ஒருத்தியுமோ...
அல்லது
நான் மட்டுமோ...
அல்லது
காதலியே இல்லை என்றாலும் கூட
நான் காதலித்தாக வேண்டுமே...!
கற்பனையாகவோ...
கற்பனைக் காதலியையோ...
கற்பனைக் காதலையோ...
அல்லது...
வெறும் கற்பனையையேனும்...
நான் காதலித்தாக வேன்டுமே...!
மிகச்சிறந்த கவிதைகளை
படைத்திடவும்...
சிறந்த கவிஞனாய்
தகுதி பெறவும்
நான் காதலித்தாக வேண்டுமே!

No comments: