Friday, April 10, 2009

தேவைப்பட்டா.. சொல்லுங்க..

அன்புடையீர்
வணக்கம்!
நான் தற்போது புதிய முயற்சிகளை மேற்கொள்ள சித்தமாகிறேன்..

*புத்தகங்கள் பதிப்பித்தல்,(Publication Works)
*இணையதளங்கள் வடிவமைத்தல், (Website Creation)
*Data Entry, Data Conversion, Online Project Works,
*News Agency
*Advertising Agency ..ect...

யாருக்காவது தேவைப்பட்டா.. சொல்லுங்க..
nagaisbalamurali@gmail.com

Monday, April 6, 2009

"தமிழ் அமுதம்" தமிழ்க் குழுமம்!

தமிழ் நெஞ்சங்களும் தமிழினை நேசிக்கும் உள்ளங்களும் சங்கமிக்க அன்புடன் வரவேற்கிறேன் தமிழ் குழுமங்களில் இன்னுமொரு புதிய முயற்சியாக துவங்கப்பட்டுள்ள இந்த தமிழ் அமுதம் குழுமம் அனைவரிடத்தும் அன்பெனும் அமுதத்தை வாரி வழங்கவும், அறிவெனும் அமுதம் பருகிடவும் அனைத்து நட்பு உள்ளங்களும் பங்கேற்க வேண்டுகிறேன்.
இயன்றவரையிலும் தமிழில் எழுதிட முயற்சிப்போம்!
நன்றி!
அன்புடன்,
நாகை.எஸ்.பாலமுரளி.
துணிவு மட்டும் இருக்குமென்றால்
எதுவும் கைக்கெட்டும் தூரமே!
குழுவினைப் பார்வையிட
Google Groups
தமிழ் அமுதம்

Visit this group

குழுவில் இணைய

Google Groups
Subscribe to தமிழ் அமுதம்
Email:

Friday, August 15, 2008



இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Sunday, April 13, 2008

பத்திரிகைகளில் வெற்றி நடை செய்திகள் -2


காலைக்கதிர் 11.04.2008

பத்திரிகைகளில் வெற்றி நடை செய்திகள் -1


தினகரன் 08.04.2008

Friday, April 11, 2008

பட விளக்கம்





“வெற்றி நடை” மாத இதழினை ஆபீஸர்ஸ் கிளப் செயலாளர் பி.எஸ்.என்.எல். விமலாதித்தன் வெளியிட மூத்த உறுப்பினர். கே.பி. ரெங்கசாமி பெற்றுக் கொள்கிறார். அருகில் ஆசிரியர் பாலமுரளி, ஆபிஸர்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர்.

வெற்றி நடை- மாத இதழ் வெளியீட்டு விழா

இதழ் வெளியீட்டு விழா!


கரூர் ஆபீஸர்ஸ் கிளப் சார்பில் “வெற்றி நடை” மாத இதழ் வெளியீட்டு விழா நடை பெற்றது. விழாவுக்கு துணைத்தலைவர் ஆடிட்டர்.ஆர்.பழனிசாமி தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் கரூர் ஹேண்ட்லூம் சிட்டி தலைவர்.எஸ்.கே.டி.எம்.கருப்பசாமி மற்றும் ஆடிட்டர் வி.சுப்புராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் இதழை ஆபீஸர்ஸ் கிளப் செயலாளர் பி.எஸ்.என்.எல்.விமலாதித்தன் வெளியிட மூத்த உறுப்பினர் கே.பி. ரெங்கசாமி பெற்றுக் கொண்டார்.

விழாவில் ஆசிரியர் நாகை.எஸ்.பாலமுரளி, இணையாசிரியர் எஸ்.தேவராஜன், டெக்ஸ்ட்ரானிக் டெக்ஸ்டைல் சாஃப்ட்வேர் நிறுவன விற்பனைப் பிரதிநிதி எம்.பழனி, இதழ் வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் திருமதி.எஸ்.பார்வதி, எஸ்.ஹரிஹரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆபீஸர்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஆசிரியர் பாலமுரளி நன்றி கூறினார்

Sunday, April 6, 2008

அன்பான உறவுகளுக்கு - வெற்றி நடை என்னும் சமுதாய முன்னேற்ற மாத இதழ்!

அன்பான உறவுகளுக்கு
இனிய வணக்கங்கள்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
உங்களை எல்லாம் இந்த மடலின் வாயிலாக சந்திப்பதில்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆனாலும் முன்பு போல தொடர்ந்து உங்களுடன் அளவளாவ இயலவில்லை என்பது கொஞ்சம் கூடுதல் வருத்தமாகத்தான் இருக்கிறது.
அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறையினை பிரார்த்திக்கிறேன்!
கூடிய விரைவில் நானும் உங்களுடன் வந்து கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

அப்புறம் இன்னொரு முக்கியமான தகவல்,

நானும் எனது சகோதரரும் சேர்ந்து மிக நீண்டகால முயற்சியாக பல சூழ்நிலை போராட்டங்களை தாண்டி
"வெற்றி நடை" என்னும் சமுதாய முன்னேற்ற மாத இதழ் ஒன்றினை துவங்கும் முயற்சியில் கிட்டத்தட்ட ஏற்பாடுகள் முடிவடைந்து தற்போது ஏப்ரல் மாதம் முதல் இதழினை வெளியிட முடிவு செய்துள்ளோம். இதில் எனது அன்பு உறவுகளின் பங்களிப்பும் நிச்சயமாக இடம் பெறவேண்டும் என்பது எனது அவா.

உங்களது பங்களிப்பு எங்களது முயற்சியினை வெற்றியடையச்செய்யும் என்று நம்புகிறேன்
உங்களது பங்களிப்புகள்
படைப்புகளாகவோ, நன்கொடையாகவோ, தங்களது நிறுவன விளம்பரங்களாகவோ இருக்கலாம்.
கண்டிப்பாக இதழ் வளர்சிக்கான இந்த உதவியினை செய்வீர்கள் என்ற் நம்புகிறேன்.

நன்கொடை விபரம்:
ஓராண்டு நன்கொடை = ரூபாய்.84.00 மட்டும் (12 மாத இதழ்கள்)
அரையாண்டு நன்கொடை = ரூபாய் 42.00 ம்ட்டும் (6 மாத இதழ்கள்)
புரவலர் நன்கொடை (ஆயுள் சந்தா)=ரூபாய்1000/-


படைப்புகள் மற்றும் நன்கொடை தொகைகள் அனுப்ப வேண்டிய முகவரி:



எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:
"வெற்றி நடை" மாத இதழ்,
எண்.94, திண்ணப்ப நகர் (விரிவு)
காந்தி கிராமம்,
பசுபதி பாளையம் (P.0)
கரூர்.
அஞ்சல் குறியீட்டு எண் -639 004.
தொலை பேசி எண் :9789709641

வங்கியின் மூலம் செலுத்த விரும்புபவர்கள்
பெயர்:S.Devarajan
வங்கி: Axis கிளை: திருச்சி
எண்:137010100267908
என்கிற எண்ணில் செலுத்தலாம்.
தங்கள் முகவரியினை
nagaisbalamurali@gmail.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னைஞ்சலாகவோ அல்லது கீழ் காணும் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாகவோ அனுப்பிட வேண்டுகிறேன்.
தொலை பேசி எண் :9789709641

வெற்றிநடை!

Sunday, March 2, 2008

அட... வந்துட்டோம்ல....


அருமை
---------------
எதுவும் இருக்கும் போது
யாருக்குமே புரிவதில்லை
அதன் அருமை
இழக்கும்போது புரியும் அளவுக்கு...

**********************
உடல் வருத்தினாலும்..
உள்ளத்தின் வலிமை
வெற்றி தரும்!
நம்பிக்கைகள் வெற்றி பெற்றால்
வாழ்வே வண்ணமயமாகும்!
நல்ல சிந்தனைகள்...
நல்ல லட்சியங்களைத் தரும்!
நல்ல லட்சியங்கள்..
நல்ல வெற்றிகளைத் தரும்!
நல்ல வெற்றிகள்...
நல்ல வாழ்வினைத் தரும்!

வலி
--------
மனசு
வலிக்கத்தான் செய்தது
மரணிக்கும் உணர்வுகளோடு
கழிந்து போன வேலையில்லாத
நாட்களில்....

***********
நினைவுகள்
----------
என்றுமே மறப்பதில்லை...
சில நேரங்களில்..
மறைக்கப்படும்..
பாசாங்காக...
என்றுமே மரணிப்பதில்லை...
சில பொழுதுகளில் மரத்துப்
போவதுண்டு...
வலியினால்...
என்றுமே நிலைப்பதில்லை
சில சந்தர்ப்பங்களில்
நிலையாமை கொண்டு..
கலையும் கனவுகள்போல
போலியாக பதிவு செய்யும்
நினைவுகள்..
**********

Sunday, July 1, 2007

சுட்டது..!

தலைப்புதானுங்க "சுட்டது..!"
கவிதை சுடாதது.(ஒரு முயற்சிதான்)
------------------------------------------
எனக்கு ஒரு கணமும்
உன்னைப் பிரியாதிருக்க ஆசைதான்..ஆனாலும்...
பிரிந்து விடுவதாய்ச் சொல்லிய..
உன் வார்த்தைகள்தானடி என்னைச்
சுட்டது!

இறப்பிலும் பிரியாத வரம் வேண்டுமென்றாய்..
ஆனாலும் பிரிவைப் பற்றியே பேசுகின்றாய்..
எனக்கான நேரங்கள் எல்லாம் உன் நினைவுகளுடனே..
வாழ்ந்திருக்கிறேன்..
எந்நேரமும் நான் உன்னை விட்டு விலகியதில்லை..
ஆனால் அதனை சோதித்துப் பார்க்க நினைக்கும்
உன் வார்த்தைகள் தானடி என்னைச் சுட்டது...
அதையும் நிரூபித்துக் காட்டியிருப்பேன்..
நான் அனுமனாக இருந்திருந்தால்..