Monday, April 30, 2007

கவிதை மாதிரி...3

செவ்வாயில்
தோஷம் இருந்தாலும்
முயற்சியிருந்தா
ல்
செவ்வாய்க்கே
போய் வரலாம்..
:))

நிறுத்தி வைத்தாய்...


நிறுத்தி வைத்தாய்...
சிலகாலங்கள்
சந்திப்பதையும்...
உரையாடுவதையும்...
ஆனாலும் எப்படி
சாத்தியமானது?
நினைப்பதையும் கூட
நிறுத்தி வைக்க...

காதல்...

நோய்களில்
சுகம் தரும் நோய்
காதல்...
நோக வைத்தாலும்...

இது கவிதை அல்ல!

இது கவிதை அல்ல!
ஒரு தளத்தில் படித்தபோது
மிகவும் யோசிக்க வைத்த வார்த்தை.

"விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள்.
ஒரு வேளை இதன்பிறகு நாம் வாழ்க்கையில் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்."

கவிதை மாதிரி...2

******
எப்படி இருக்கும் எதிர்காலம்,
பட்டதாரி சோதிடம் கேட்டா(ன்)ல்?
******
காதலும் கவிதை போலே
விரைவில் தோன்றாது!
*****
புயலடிக்க வேண்டுதல்
பள்ளிக்கு விடுப்பு கிடைக்குமே!
*****
தலைவனுக்கோர் தலை(வி)வலி
திருமணம்!
*****
தோழமையை உயிர்ப்பிக்கும் தோழன்
கணினி!
*****

கவிதை மாதிரி...

*****
பேருந்து நிறுத்தம்
பஸ் ஸ்டாப் அல்ல
ஸ்ட்ரைக்!
*****
காதலிப்பது சரியா தப்பா?
தப்புதான்!
(ஒரு காதலி கிடைக்கும் வரை)
*****
கன்னியும் கணினியும்
ஒன்று போலே
விட்டுப்பிரிய மனம்
வராது!
*****
ஒரு வார்த்தை சொல்ல முடியாததால்
ஒரு வாழ்க்கை முடிந்தது -காதல்..!
*****

சொல்ல முடியாமல்...

கவிதைகள் சொல்கிறேன்
கண்டதையும் சொல்கிறேன்
காதலை மட்டும்...
சொல்ல முடியாமல்...
:))

Sunday, April 29, 2007

நானும்...

நானும்
காத்திருக்கிறேன்
காலம் தரும்
சிறப்பான வாழ்வு -எனும்
தளர்ந்து விடா
நம்பிக்கையுடன்...

எஸ்.எம்.எஸ். அனுப்பலாமா...2

எனக்கு வந்த... சில எஸ்.எம்.எஸ்.
***********************************
sacrifice is greater than love,
charecter is greater than beauty,
humanity is greater than wealth,
but nothing is greater than confidence.
never loose it
*****
"Nobody candiscover new oceans
untill he has the courage
to loose the sight of the shore
*****
What ever happens Just
"relax&manage" 2 make 'A' smile.
Life is not a "Problem" 2 'be' solved
but 'A' gift 2 'be' Enjoyed
Make "Everyday" 'Ur' 'best' day
*****
vaazkkai enraal 1000 irukkum
1000-il onnaa ennooda Sms irukkum
*****
We may not achieve everything we dream.
but we will not achieve anything
unless we dream
*****
Don't worry for the delay in ur success
compared to others
because construction of pyramid
take too much time
than a ordinary building
*****

வாழ்க்கை!

வாழ்கிறேன் நானும்
என்று பிறந்ததற்காக...
வாழாதே!
மக்கள் சேவையில்
பிறவிப்பயன் கண்டு
வாழ்வினை வெற்றிகொள்!

Thursday, April 26, 2007

நன்றி


வஞ்சகமும் சூழ்ச்சியும்
நிறைந்த வையகத்தில்
நன்றியுணர்ச்சியினை
நாயினிடத்தில்...
கற்க
முயலுகின்றதோ
நவீன மழலை?

இந்நாட்களில்...

இந்நாட்களில்...
அதிகம் சேர்க்கவேண்டும்
என்பதற்காகவே -அதிகம்
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்

சொந்தம்!

காதலும், கற்பனை நேசமும்
கறிக்குதவா ஏட்டுச் சுரைக்காய்!
சொந்தமான பந்தம்தான்
கடைசி வரை நிஜமாகும் சொந்தம்!

Wednesday, April 25, 2007

எஸ்.எம்.எஸ். அனுப்பலாமா...1

எனக்கு வந்த சில SMS

1."If people talk behind your back" what does that mean? simple, it
means U R 2 STEPS AHEAD of them, don't worry about such people..."

2.We Love ourself Even after Doing Many Mistakes... Then How can We
Hate others for their Small Mistakes... Strange, But True...

3."Waves are my inspiration.Not because they rise and fall, but
because each time they fall, they rise again"-Dr.Kalam.

4)"if god does not give us what we want he defin nitely gives us what
we need"

5)" accept what you cannot change, change what you cannot accept.
that is the key to be happy in life"

6)"patience and delay achive more than force and rage"

7)joke:
what are the 3 fastest ways of communication?
a) telephone b) telivision c) tell to a woman

இது உனதா? இல்லை எனதா?


இது உனதா? இல்லை எனதா?

இது உனதா? இல்லை எனதா?
உலகம் தோன்றியதுமுதலே
வர்க்கப்போராட்டத்திற்கும்...
வாரிசுப் போராட்டத்திற்கும்...
வாழ்க்கைப் போராட்டத்திற்கும்...
வழிகாட்டியாகவும் திசை மாற்றியாகவும்
தோன்றிய வாசகம்!

Tuesday, April 24, 2007

கவிதையாகத்தான் நினைக்கிறேன்

உறக்கம்
இறப்பின் ஒத்திகை
இறப்பு
நிரந்தர உறக்கம் !

-------xxxxxxx------
தோல்வி = வேதனை
வேதனை+அவநம்பிக்கை=பெரும்தோல்வி
வேதனை+முயற்சி=சாதனை


-------xxxxxxx------
அன்பு
அதிகமாகும்போது
பித்து பிடிக்கும்
அன்பு கொண்டவர்மீது
நிராகரிக்கப்படும்போது
தண்டனையாகும்
அன்பு கொண்டவருக்கு

-------xxxxxxx------
காதல் வந்தால்
சுயம் போகும்...
சுயம் போனால்
காதல் வரும்
ஞானத்தின் மீது!

------xxxxx--------

சுதந்திரம்...

சுதந்திரம்...

எல்லா வசதிகளும்
கிடைக்கும் வாய்ப்பிருந்தும்...
வண்ணத்துப்பூச்சிக்கு கிடைக்கும்
சுதந்திரம் கூட கிடைக்காமல்
சூழ்நிலைக்கைதியாய் மனிதன...

Monday, April 23, 2007

எங்ஙனம்?-பரிசு பெறாத கவிதை



வியக்கும் விழிகளின்
உட்புகுந்து, உறவுகலினூடே
தனித்திருக்கச் செய்தது
எங்ஙனம்?
பார்வையின் வெம்மையில்
கற்பனை உறவில்
தகித்திருக்கச் செய்தது
எங்ஙனம்?
உற்சாக பொழுதுகளில்
உழன்றிருக்கச் செய்ததும்,
கவலைப் பொழுதிலும்
கற்பனையில்
மகிழ்ந்திருக்கச் செய்ததும்
சாத்தியமானது
எங்ஙனம்?
உண்ணா நோன்பும்,
உறங்கா மாண்பும்
எனையறியாமலேயே
ஏற்றிருக்கச் செய்தது
எங்ஙனம்?
காண்பனவற்றிலும்,
களிப்பனவற்றிலும்,
சுவைப்பனவற்றிலும்
காணும் உட்பொருளாய்
கலந்திருந்து
மனதில் வாசம் கொண்ட
மலரே -- எனை விடுத்து
மண்ணில் உறங்கிட
சம்மதித்தது
எங்ஙனம்?

நமக்குள் காதல் - பரிசு பெற்ற கவிதை!

நம்பிக்கை குழுமத்தின் ஆண்டுவிழா கவிதைப்போட்டியில் பரிசு பெற்ற கவிதை!

நமக்குள் காதல்
நினைக்கையில் சுகம்!
விழித்துடிப்பின்
உட்படல பதிவுகள்
வழியே துவங்கியது!
சிமிட்டல்களில்
மறைந்தும்,
சிரிப்புகளில்
தொலைந்தும்
வளர்ந்தது!
சிணுங்கல்களில்
ஆர்ப்பரித்துக்
கனிந்தது!
சில கணங்களில்
சிறகடித்துப்
பறந்தது!
விட்டுப்போன
சில விரிசல்களில்
ரணங்களாய் நிறைந்தது!
ஆயினும் காதலியே
காலம் வரும் வரை
காத்திரு கண்டிப்பாக
கரமிணைவோம்!

"காதலித்தாக வேண்டும்..!"

காதல்...
உருகிடும் ஜோதியல்ல...
உருக்கிடும் ஜோதி!
செதுக்கப்படும் சிற்பமல்ல...
சிதைத்திடும் வெப்பம்!
காத்திருத்தலில்
பொறுமையைக்
கற்றுக்கொடுத்தாலும்...
காணாத பொழுதினில்
வெறுமையில்
தத்தளிக்க வைத்திடும்!
அகத்திற்கு
ஆறுதல் அளித்திட்டாலும்...
அறிவிற்கு
ஊறு விளைவித்திடும்!
ஆயினும்
என் செய்வேன்?
நான் காதலித்தாக வேண்டுமே!
மனக்குட்டையை
குழப்பி விட்டலும்...
வேதனை ஊற்றில்
கவிதை முத்தெடுக்க
உதவும் காதலை
நான் காதலித்தாக வேண்டுமே!
கவலைகளை
சூடிக்கொள்ள அல்ல...
வேதனைகளை
நாடிச்செல்லவும் அல்ல...
சோதனைகளை
தாங்கிக்கொள்ளவும் அல்ல..!
என் உள்ளத்தை
மகிழ்விக்க...
என் வழ்வை சுவைக்க...
என் கவிதை வரிகளில்
திளைத்திருக்க...
என்று எல்லாமே
சுயநலமாக இருந்தாலும்
நான் காதலித்தாக வேண்டுமே..!
நானும்,ஒருத்தியுமோ...
அல்லது
நான் மட்டுமோ...
அல்லது
காதலியே இல்லை என்றாலும் கூட
நான் காதலித்தாக வேண்டுமே...!
கற்பனையாகவோ...
கற்பனைக் காதலியையோ...
கற்பனைக் காதலையோ...
அல்லது...
வெறும் கற்பனையையேனும்...
நான் காதலித்தாக வேன்டுமே...!
மிகச்சிறந்த கவிதைகளை
படைத்திடவும்...
சிறந்த கவிஞனாய்
தகுதி பெறவும்
நான் காதலித்தாக வேண்டுமே!

ஒரு தலைராகம்

ஒரு ராகம் உனக்குள்ளே...
ஒரு ராகம் எனக்குள்ளே..
ஒன்றினையும் ஒரே ராகமாக
என்றிருந்தேன் சில காலமாக
இன்றும் இருக்கிறேன் ஒரே ராகமாக
ஒரு தலைராகமாக...

Sunday, April 22, 2007

விதி



குடிசைகளில்
வாழ்கிறார்கள்...
மாடிகளை
உருவாக்கியவர்கள்...!

சுவாசக்காற்றிலும்...

சுவாசக்காற்றிலும்...
அசுத்தங்கள்
நி
றைந்திருக்கும்...
உன் நேசத்தில் மட்டுமே
பரிசுத்தம்
நிறைந்திருக்கும்!


Saturday, April 21, 2007

சிக்னல் -ஹைக்கூ

சிக்னல்...
பொது மக்களின்
பொறுமையை
சோதிக்கும் களம்!

****************************
சிக்னல்...
விதி விலக்கு
வி.ஐ.பிகளுக்கு மட்டும்!

****************************

உழைப்பாளி..!


ஓடுகள்கூட
உயரத்திலே...
ஓடாய்த் தேய்ந்தும்
உயர வில்லை...

வாழ்க்கை...-ஹைக்கூ.

லட்சியத்திற்கும்...
யதார்த்தத்திற்கும்...
இடையிலான
போராட்டம்..!

Friday, April 20, 2007

ஜோக் சொல்லப்போறேன்-7

*****
"எங்கய்யா கூட்டத்துக்கு வந்த
யாரையுமே காணோம்?"

"எல்லாரும் தலைவரோட பேச்சுல உருகி
கரைஞ்சு போயிட்டாங்க!
*****
(காய்கறி கடையில்)
"உருள பத்து ரூபா, உருள பத்து ரூபா..."

"என்னடி இது அநியாயமா இருக்கு?
உருள பத்து ரூபாவாமில்ல"

"அதானே! உருள்றதுக்கு எல்லாமா
ரூபா குடுக்கணும்?"
*****

Thursday, April 19, 2007

ஜோக் சொல்லப்போறேன்-6

"செய்திகளை முந்தித்தரும் பத்திரிகைங்கறதுக்காக இப்படியா?"

"ஏன் என்ன ஆச்சு?"

"சீரியசா இருக்கிற மந்திரியை இறந்துட்டதா போட்டுட்டாங்க!"

*****
"டாக்டர் நான் உங்களை நம்பிதான் இருக்கேன்.

எப்படியாவது என்னை காப்பாத்திடுங்க.."

"கவலையே படாதீங்க! உங்களுக்கு ஒண்னும் ஆகாது நானும் உங்களை
நம்பிதானே க்ளினிக் ஆரம்பிச்சிருக்கேன்"
******


ஜோக் சொல்லப்போறேன்-5

இன்னும்ஜோக் சொல்லப்போறேன்
யாரும் ஓடாதீங்க.

"இந்த எறும்பு சாக்பீஸை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரியுது!"

"என்ன புரிஞ்சிடுச்சு?"

"எங்கயாவது ஆக்ஸிடெண்ட் நடந்தா போலீஸ் எதுக்கு சாக் மார்க் போடறாங்க?"

"எதுக்கு?"

"எறும்பு வராம இருக்கத்தான்"


*****
"என்ன சார் இங்க்லீஸ் படத்துக்கு போய் தமிழ் பேரு வைக்கறேங்கறீங்க?"
"தமிழ்ல பேரு வைக்கிற படத்துக்கு வரிச்சலுகை தராங்களாம்யா"

*****

காக்கா ஏன் கருப்பா இருக்கு தெரியுமா?

அதோட அப்பா அம்மா கருப்பு அதுனால அது கருப்பா இருக்கு!
ஹி...ஹி...
:)):))

******

சரி கிளி ஏன் பச்சையா இருக்கு தெரியுமா?
அதை இன்னும் வேக வைக்கலை அதான் பச்சையா இருக்கு!

******

"பூனை குறுக்கே போனா சகுணம் சரியில்லேன்னு சொல்றது சரியாதான் இருக்கு!"
"என்னடா சொல்றே?"
"நான் காரை ரிவர்ஸ் எடுத்தப்ப குறுக்கே போன பூனை அடிபட்டு செத்துப் போயிடுச்சி!"

******


ஜோக் சொல்லப்போறேன்-4

"கலிகாலம்"
*********************************************************************

ஒரு வாலிபன் சைக்கிளில் வேகமாக வந்தான் எதிரில் வந்த
ஒருவர் மீது லேசாக மோதிவிட்டன்.
"ஸாரி சார்" என்றான் பதட்டமாக.
"பரவாயில்லைப்பா" என்றார் சாந்தமாக.
"இது தெரிஞ்சிருந்தா வேகமா மோதியிருப்பேனே"
என்றான் துடுக்காக.
*********************************************************************
பாமரன்
*********************************************************************
காரில் மோத வந்தவரிடம்...
டிரைவர்:"ஏன்யா வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?"
பாமரன்:"ஆமாங்கய்யா வரும்போது எப்போதுமே வீட்ல
சொல்லிட்டுதான் வருவேன்"
*********************************************************************
நடிகையின் கூந்தல்...
*********************************************************************
நிருபர்:"உங்க கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா?"
நடிகை:"என் கூந்தலே செயற்கைதான்..!"
நிருபர்:!?!?!?
**********************************************************************
எத்தனை தலை?
**********************************************************************
ஒருவர்:"டாக்டர் எனக்கு தலையெல்லாம் சுத்துது டாக்டர்.."
டாக்டர்:"ஆமா உங்களுக்கு எத்தனை தலை?"
***********************************************************************
காலக்கொடுமை
***********************************************************************
யாசகன்:"ஐயா ஒரு ரூவா இருந்தா குடுங்களேன்"
மற்றவர்:"என் கையில காசில்லைப்பா!"
யாசகன்:"பரவாயில்லை,உங்க பாக்கெட்ல இருக்கிறதை குடுங்க"
************************************************************************

ஜோக் சொல்லப்போறேன்-3

ரவி: நான் விமலாவுக்கு போன் பண்ணினப்ப அவங்க அம்மா எடுத்துட்டாங்க...
ராமு: அட, அப்புறம் என்ன ஆச்சு?
ரவி: ராங் மெம்பர்னு சொல்லி வெச்சுட்டேன்
*************************************************************************

மகன்: அப்பா! நான் B.A பண்ணவா? M.A பண்ணவா?

அப்பா: எதை வேணும்னாலும் பண்ணு என்னை தொந்தரவு பண்ணாதே...
**************************************************************************
டாக்டர்: ஹலோ! ரவி சவுக்கியமா இருக்கீங்களா?
ரவி: சவுக்கியமா இருந்தா ஏன் உங்களை பார்க்க வரேன்?
***************************************************************************
ரவி: படிப்பை முடிச்சிட்டீங்க மேல என்ன பண்ணப் போறீங்க?
ரகு: மேல ஒண்ணும் பண்ண முடியாது. பூமியிலேதான் எதாவது பண்ணனும்.
****************************************************************************

ஜோக் சொல்லப்போறேன்-2

வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
"சினிமா படத்துல இருந்துதான்"

"அய்யோ!"
என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

ஜோக் சொல்லப்போறேன்-1

ஒரு மகா சோம்பேறிகிட்டே அவங்கப்பா
கேட்டாரு,
"ஏண்டா எப்ப பார்த்தாலும் சும்மாவே படுத்து கிடக்குறியே! உருப்படியா
எதாவது வேலை தேடக் கூடாதா?"

"என்ன வேலைக்கு போகச் சொல்ற?
எல்லாமே கஷ்டமான வேலையா இருக்கு!"

"ஏன் அந்த துணிக் கடையில வரச் சொன்னாங்களே போகக் கூடாதா?"

"அது சேல்ஸ் மேன் வேலை நின்னு நின்னு கால் வலி கண்டிடும்"

"சரி அந்த மளிகைக் கடையில பில் போட கூப்பிட்டாங்களே அதுக்காவது
போகலாமில்ல..."

"அது ஒரே போர் உக்கார்ந்து உக்கார்ந்து இடுப்பு வலி கண்டிடும்"

"சரி அந்த டி வி ஷோரூம் வேலைக்கு போகலாமில்ல?"

"அதுவும் ரொம்ப கஷ்டம்பா டி வியைப் பார்த்து பார்த்தே கழுத்து வலி
கண்டிடும்"

"அப்ப எந்த வேலைக்குதான் போவே?"

"ஏம்பா இப்படி உயிரை எடுக்கிறே?
படுத்துக்கிட்டே பார்க்கிற மாதிரி எதாவது ஈசியான வேலை இருந்தா சொல்லு பார்க்கிறேன்"

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்-3

லிபர்மென் என்பவரின் 101வது வயதில் பத்திரிகையளர்கள் அவரைப் பேட்டி கண்ட போது அவர் சொன்ன பதில் இது.

"இப்போது 101 வயது அடைந்து விட்ட முதியவனாக என்னை நான் கருதவில்லை. 101 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மனிதனாகவே என்னை நான் எண்ணிக் கொள்கிறேன். 80-90 வயதெல்லாம் வயோதிகமே அல்ல வயதாகிவிட்டதே என்று ஒரு போதும் எண்ணாதீர்கள், உன்களால் என்ன சாதிக்க முடியும் என்பதிலேயே கவனமாக இருங்கள்.அதுதான் வாழ்க்கையின் நம்பிக்கைக்கும் மகிழ்ச்சிக்கும் வழி!"

மகிழ்ச்சி!

அகிலமெங்கும்
தேடிக் கொண்டிருக்கிறோம்
அகத்தில்
இருப்பதை அறியாமல்!

Wednesday, April 18, 2007

சன்மானம்!

பிறப்பிலிருந்து...
இறப்பு வரை
தொடரும் சங்கிலியாகத்தான்
இருக்கிறது... இந்த சன்மானம்.
ஆனாலும் ஆயிரக்கணக்கில்
எழுதிக்குவிக்கும் கவிஞனுக்கு...
ஒரு கமெண்ட் கிடைத்தால்
அதுவே பெரிய சன்மானம்!

Monday, April 16, 2007

காதல்!

காத்திருத்தலில்...
சுகம்!
காத்திருக்க வைப்பதில்...
சோகம்!

மனசு

குழம்பிய
குட்டையாய்...
காதலுக்கு
காத்திருக்கும்
மனசு!

கோபம்

சாதாரண
விஷயங்களுக்கெல்லாம்
வரும் கோபம்
சத்தியமாக
வர மறுக்கிறது
நீ தவறே செய்தாலும்!

கோவில் - ஹைக்கூ...

கோவில் - ஹைக்கூ...

ஒரு கோவிலே...
கோவிலுக்கு...
போகிறதே!
அம்மா!


ஹைக்கூ- கொஞ்சம்...

குறும்பா(ஹைக்கூ...)
***
வாழ்க்கை

நம் வசப்படும்
அல்லது
வசப்படுத்தும்
***
மரணங்கள்
சம்பவிக்கும்
சம்பவங்கள்
மரணிக்கும்
***
பூக்கள்
புன்னகைக்கும்
புன்னகைகள்
பூக்கும்
***
உலகம்
ஆசைவயமானது
ஆசைகள்
உலக மயமானது
***
தாயிற்சிறந்த
கோயிலுமில்லை
கோயிலில் மட்டும்
தெய்வம் இல்லை
***
கவிதைகள் சிந்தனைகளை
வளப்படுத்தும்
சிந்தனைகள் கவிதைகளை
வலுப்படுத்தும்
***
கவிஞன் காதலை
காவியமாக்குவான்
காதல் கவிஞனை
காலியாக்கும்
***

மகிழ்ச்சியாகவாழ சில வழிகள்-2


மானிடத்தின் தேவை எதுவென்று நினைக்கிறீர்கள்? ''மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..
மகிழ்ச்சி''! ஆமாம். மகிழ்ச்சியோடு வாழும் வாழ்க்கைதானே வெற்றிகரமான
வாழ்க்கையாகும்.

அந்த மகிழ்ச்சியை மன நிறைவின் மூலம் நாம் உணர்கிறோம். அப்படியோர்
மனநிறைவைப் பெறுவதற்கான இந்த நான்கு குணங்களும் நமக்குள் வந்துவிட்டால்
நாம் முழுமையாக வெளிப்பட்டு நமது இலக்கை நிச்சயமாக எட்டமுடியும்.

மனிதநேயம்

ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளும் மொட்டுவிட்டிருக்கும் முதன்மையான இயல்பு இந்த
''நேயம்''. இந்த மொட்டானது மலர, மலர மனிதனின் வாழ்க்கையும் மலர்ந்து
மணம் வீசத் தொடங்கி விடுகிறது.

அதென்ன நேயம்? அன்பு, பாசம், கருணை, காதல் என்னும் சொற்களின் சாரம். இந்த
நேயமே மனிதர்களை இணைக்கிறது, பிணைக்கிறது, அரவணைக்கிறது, ஆற்றல்
தருகிறது, மன்னிக்கிறது, ஆறுதல் தருகிறது, ஊக்கம் தருகிறது,
உருவாக்குகிறது...

அப்படிப்பட்ட நேயமே மனித வாழ்வின் அடிப்படையும், அவசியமானதும்,
அற்புதமானதும், ஆக்கப்பூர்வமானதுமான குணமாகும். நேயம் மட்டும் மலராது
போனால், மனித குலமே வேரற்றுப் போகும். புகையும், பகையும், போரும்,
வெறுப்பும், விரக்தியுமே மிஞ்சும். சுயம் கெட்டு, சூழலும் கெட்டு மனித
இனம் பட்டுப் போகும். இந்தப் பிரபஞ்சமே இற்றுப்போகும்.

இந்தப் பிரபஞ்சம் என்னும் பெரும்பொருளே, ''நேயம்'' என்னும் அரும்
பொருளால் உருவானதே அன்றி வேறில்லை. கருணை வடிவான எதையும் நாம் கடவுளென்று
அழைப்பதும் அதனால்தான். நேயத்தின் கருப்பை தாய்மை. தாய்மையின்
பரிணாமந்தானே இந்த உயிரினம். அத்தனை அருங்குணங்களுக்கும் தலையாயது நேயமே
என்பதால் நேயத்தை நம் நெஞ்சின் அடித்தளமாக்குவோம்.

நேர்மை

நேர்மையானது வேறொன்றுமில்லை, அது நிஜமாய் இருப்பது. நம்பகத்தன்மையின்
மறுபெயரே நேர்மை. உண்மையைச் சொல்லி, நன்மையைச் செய்வது அது. சரியாய்
முறையாய் நடப்பது. நேர்மை என்பது நேர் நிற்பதைக் குறிக்கிறது.

பேராசை கொள்பவர்கள் பொறாமைப்படுவார்கள், பொறாமைப்படுபவர்கள் சூழ்ச்சி
செய்வார்கள், குறுக்கு வழியில் செல்ல முயல்வார்கள், பொய் சொல்வார்கள்,
கோபப்படுவார்கள், குதர்க்கம் பேசுவார்கள், ஆரம்பத்தில் அவர்கள் காட்டில்
மழை பெய்யும். நாளடைவில் அத்தனையும் பொய்த்துவிடும். இது இயற்கையின்
நியதி. நேர்மை தொடக்கத்தில் கடினம். நேர்மையாய் நடக்கத் துணிவு
வேண்டும், மனதில் உறுதிவேண்டும், நாளடைவில் நேர்மையே வெல்லும். நெஞ்சில்
அமைதி குடிகொள்ளும்.

வாழ்க்கையானாலும், வர்த்தகமானாலும் அரசியலானாலும், சமூகமானாலும் ஒவ்வொரு
தனி மனிதனும் நேர்மையின் வழி நிற்கும்போது அவன் ஒரு தலைசிறந்த தலைவனாக,
பலரும் போற்றும் முன்னுதாரணமாகத் திகழ்வான் என்பது உறுதி. உலகின்
முன்னோடிகளெல்லாம் நேர்மையைக் கடைபிடித்து நெஞ்சு நிமிர வாழ்ந்தவர்களே!
என்பதுதான் வரலாற்று உண்மை. வரலாறுகளை நினைவில் கொள்வோம். வாழ்வில்
நேர்மை கொள்வோம். நாமும் வரலாறு படைப்போம்.

நேரம்

''மணி என்ன''? எனக் கேட்டு நமது மணிக்கட்டைத் திருப்பச் செய்யும்
பொழுதெல்லாம் நமக்கு உணர்த்துவது நேரத்தின் அருமையைத்தானே! ''நேரத்தை''
நறுக்குத் தெறித்தாற்போல் கூறுவது என்றால் அதை ''நமது வாழ்நாள்'' என்று
வரையறுப்பதுதான். நேரச் செலவு என்பது நமது வாழ்நாளின் செலவென்று உணர்வது
தானே பொருந்தும்.

செலவழிக்கப்பட்ட பணத்தை, செலவழிக்கப்பட்ட பொருளை மீண்டும் பெற்றுவிட
முடியும். ஆனால் செலவழிக்கப்பட்ட நேரத்தை நம்மால் திரும்பப் பெறமுடியுமா
என்ன?

''நேரத்தை மதித்தல்'' என்பது அரிய பண்பு, நேரத்தைப் போற்றுபவர்கள்
வெற்றி பெறுகிறார்கள், உடல் நலத்தோடு வாழ்கிறார்கள், அவர்கள் மன
உளைச்சலுக்கு ஆளாவதில்லை. காரணம் தெரியுமா? நேரத்தைப் போற்றுபவர்கள் ஏதோ
ஒரு இலக்கைக் குறித்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலக்கிருப்பதால்
அவர்களிடம் ஒரு திட்டமிருக்கிறது. திட்டமிருப்பதால் அவர்களிடம் முன்
உரிமைப் பட்டியலிருக்கிறது. முன்னுரிமைப் பட்டியல் என்பது நேர
நிர்வாகத்திற்கான அடிப்படையே அன்றி வேறில்லை.

அவர்களிடம் ''அலுவலக நேரம்'', ''வீட்டு நேரம்'', டி.வி நேரம்,
உடற்பயிற்சி நேரம், படிக்கும் நேரம், சந்தை நேரம், சிந்தை நேரம், எனப் பல
நேரங்கள் உண்டு. ஆமாம் அவர்கள் நேரத்தை நிர்வகிக்கிறார்கள். எனவே தமது
வாழ்க்கையை தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். நாமும் நம் நேரத்தின்
மீது கவனம் செலுத்தத் தொடங்கினால் வள்ளுவர் சொல்வது போல உலகையே
வெல்லலாம்.

''ஆடிப்பட்டம் தேடி விதை'' ''காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்''
என்பவையெல்லாம் ''ஒவ்வொரு செயலுக்கும் உரிய, உகந்த காலமென்று ஒன்று
உண்டு. அதனை உணர்ந்து செயல்பட்டால் எதிலும் வெல்லலாம்'' என்பதையே நமக்கு
எடுத்துரைக்கிறது. எனவே நாம் நமது காலத்தின் அருமையை உணர்வோம்,
காரியமாற்றுவோம், வெற்றி பெறுவோம்.

நேர்த்தி

எதையும் செய்து முடிக்கும் ஆற்றலை ''செய்திறன்'' என்கிறோம். சரியானதைத்
தேர்ந்தெடுத்து சரியான முறையில் செய்து முடிக்கும் முறைமையை
''செயல்நேர்த்தி'' என்கிறோம்.

''செய்வன திருந்தச் செய்'' என்கிறது தமிழ். ஆனால் நடைமுறையில், நாம்
செய்த செயலையே மீண்டும், மீண்டும் திரும்பச் செய்து காலத்தையும்,
மூலப்பொருள்களையும், மனித சக்தியையும் வீணடிக்கிறோம். ஒவ்வொரு முறையும்,
ஒவ்வொரு செயலையும் ஒழுங்காய் செய்வது என்பதையே நேர்த்தி என்கிறோம்.

''நேர்த்தி'' என்பது செய்யும் செயலை மட்டும் குறிக்காமல் செயல்முறையையும்
வலியுறுத்தி நிற்கிறது. செய்முறை என்பது அதில் ஈடுபடும் மக்களை எப்படிப்
பயன்படுத்துகிறோம் என்பதை பற்றியது. மக்களை ஈடுபடுத்தும் எந்தச்
செயலையும் முறையாகச் செய்ய வேண்டுமெனில், உரையாடும் கலை, ஊக்கமூட்டும்
முறை, பிறரை புரிந்து கொள்ளும் விதம் மற்றும் சிக்கலைத் தீர்த்து
வைக்கும் அணுகுமுறை என இத்தனையிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

அப்போதுதான் நேர்த்தியோடு நாம் நம் குடும்பத்தையோ, நிறுவனத்தையோ,
தொழிலையோ, அரசியலையோ, சமூக அமைப்பையோ நடத்த முடியும் என்பதுதான்
உளவியல்பூர்வமான நடைமுறை உண்மை. அப்படிச் செயல்படும்போது அதில்
ஈடுபட்டிருக்கும் அனைவர் மனதிலும் மகிழ்ச்சி பொங்கும். அவர்கள் யாவரும்
ஒரே அணியாகச் செயல்படுவார்கள்.

இந்த அணுகுமுறையில் அடியெடுத்து வைத்து நேயம்கொண்டு, நேர்மை கொண்டு,
நேரம் பேணி, நேர்த்தி காண்போம்! நம் வாழ்க்கையை மகிழ்ச்சியால்
நிரப்புவோம்.

(நன்றி:சிஃபி தமிழ்)

Sunday, April 15, 2007

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்-1


ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும்
வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.
***************
உங்களது அன்றாட
நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன்
வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
***************
எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச்
செய்து கொண்டிருங்கள். அந்தப் பழக்கம் உங்களை
சலிப்படையாமல் இருக்கச்செய்யும்.
***************
ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச்
செய்யாமல் இருக்க இடையிடையே
வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
***************
நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
***************
நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
***************
நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து
மனம் விட்டுச் சிரியுங்கள்.
***************
மன இறுக்கத்தையும் சோர்வினையும்
மாற்றிக்கொள்ளுங்கள்.
***************
மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
***************

கல்

உடைத்திடும் பொழுதினில்
வேதனைப்படுமோ..?
செதுக்கிடும் பொழுதினில்
பெருமிதப்படுமோ..?
அர்ச்சிக்கும் பொழுதினில்
ஆனந்தப்படுமோ..?
உருவங்கள் மாறிடும்
உயிரற்ற கல்..!

முயற்சி!

மீண்டும் மீண்டும்
பூப்பதால்தான்
செடிகளும்...
புத்துணர்ச்சி
பெறுகின்றன!

வெட்ட வெட்ட
தழைப்பதனால்தான்
மரங்களும்...
விருட்சங்களாகின்றன!

இரவும் பகலும்
மாறி மாறி வருவதால்தான்...
நாட்களும்...
இனிமையாகின்றன!

வெற்றியிலும்,தோல்வியிலும்
முயற்சியினை தொடரும்
மனிதன்தான்...
சாதனையாளன் ஆகிறான்!

Saturday, April 14, 2007

இனிய புத்தாண்டில்..!


மனித நேயத்தின்...
மகத்துவத்தில்...
உயர்வளிக்கும்...

சமத்துவத்தில்...
ஒருங்கிணைந்த...
உழைப்பில்...
சகோதரத்துவத்தின்...
மகிழ்ச்சியில்...
புதிய சரித்திரம் படைக்க...
முயற்சிப்போம்
இனிய புத்தாண்டில்..!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Thursday, April 12, 2007

காப்பாற்று..!

சுவாசிக்கும் காற்று
அசுத்தம் ஆனது
குடிக்கும் நீரும்
அசுத்தம் ஆனது
உண்ணும் உணவும்
இருக்கும் நிலம்
இயல்பு மாறியது
நஞ்சு ஆனது
ஓசோன் மண்டலம்
ஓட்டையானது
மனிதா!
எல்லாம் உன் சுயநலத்தால்
இனியேனும்
பொதுநல நோக்கோடு
செயல்படு
மாசுபட்டு
அழிந்து வரும்
இயற்கை வளங்களை
காப்பாற்று!

கவிதையா?

கண்ணில் தோன்றும் காட்சியெல்லாம்
கவிதையாக்கத்தோன்றும்..
ஆயினும் உணர்வின் பதிவுகள் மட்டுமே..
கவிதையாகத்தோன்றும்!

விவாதங்கள் பலநேரங்களில்
வெட்டியாகத்தோன்றும்..,
விவாதமில்லா கருத்துக்கு..
வெற்றி எங்கே தோன்றும்?

நல்ல கருத்துகள் பல நேரங்களில்
கண்டு கொள்ளப்படாமல் போகும்...
ஆயினும் வலிமையான கருத்துகள்
என்றும் நிலைத்து நிற்கும்!

Saturday, April 7, 2007

Missed Call


ரொம்ப முக்கியமாக
ரொம்பவே வேண்டியவருக்கு...
போன் பண்ண வேண்டியிருந்தது.
பேலன்ஸ் இல்லாததால்
மிஸ்டு கால் பண்ணினான்
எப்படியும் பதில் வரும் எனும் நம்பிக்கையில்...
பதிலும் வந்தது மிஸ்டு காலாகவே!
புரிந்தது!
வேணும்னா அவன் பேசட்டுமே!
என்கிற எண்ணத்தில்...
மீண்டும் இரு பக்கமும் தொடர்ந்தது...
மிஸ்டு காலாகவே!
கடைசி வரையிலும்...
கால் பண்ணவே இல்லை இருவரும்...
இப்பவும் இப்படித்தான்...
மிஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்
பலரும்,
பல நண்பர்களையும்...
பல உறவுகளையும்...

பேதமை!

பேதமை

பூவுக்கும், சாவுக்கும்
மதமில்லை...
பூமிக்கும், சாமிக்கும்
பேதமில்லை...
வானுக்கும், நீருக்கும்
நிறமில்லை...
அன்புக்கும், அறிவுக்கும்
எல்லையில்லை!

Thursday, April 5, 2007

ஞானம்!

புத்திசாலிகளும்,

முட்டாள்களும்

பிறப்பதில்லை...

உருவாக்கப்படுகிறார்கள்!

சோதனை!

பணமென்றால்
பிணமும் வாய் திறக்கும்
என்பதனை சோதிக்கவோ?
இறந்தவர்
நெற்றியில் காசு!

Monday, April 2, 2007

I Miss You SoMuch !

கொஞ்சம் நாள் என்
அம்மாவை
பிரிந்திருந்த
ரணத்தின் பதிவு இது.
அம்மா!
உன்னைப்
பிரிந்திருந்த அந்த
சில நாட்களில்
நான் இழந்தது
எத்தனையோ!
இன்னும் நான்
மீளவில்லை அந்த
பிரிவின்
துயரிலிருந்து
உன்னிடம் வந்து
சேர்ந்த பின்னும்.
எதைச் சொல்வேன்?
எதைவிடுவேன்?
நிச்சயம் நான்
பைத்தியமாகவே
ஆனேன்.
இன்னுமொரு பிரிவினை
நிச்சயம் என்னால்
தாங்க முடியாது.
இனியொரு
பிரிவென்றால் அது
உயிரின் பிரிவாக
இருக்கட்டும்.