Sunday, April 15, 2007

முயற்சி!

மீண்டும் மீண்டும்
பூப்பதால்தான்
செடிகளும்...
புத்துணர்ச்சி
பெறுகின்றன!

வெட்ட வெட்ட
தழைப்பதனால்தான்
மரங்களும்...
விருட்சங்களாகின்றன!

இரவும் பகலும்
மாறி மாறி வருவதால்தான்...
நாட்களும்...
இனிமையாகின்றன!

வெற்றியிலும்,தோல்வியிலும்
முயற்சியினை தொடரும்
மனிதன்தான்...
சாதனையாளன் ஆகிறான்!

No comments: