Monday, April 23, 2007

நமக்குள் காதல் - பரிசு பெற்ற கவிதை!

நம்பிக்கை குழுமத்தின் ஆண்டுவிழா கவிதைப்போட்டியில் பரிசு பெற்ற கவிதை!

நமக்குள் காதல்
நினைக்கையில் சுகம்!
விழித்துடிப்பின்
உட்படல பதிவுகள்
வழியே துவங்கியது!
சிமிட்டல்களில்
மறைந்தும்,
சிரிப்புகளில்
தொலைந்தும்
வளர்ந்தது!
சிணுங்கல்களில்
ஆர்ப்பரித்துக்
கனிந்தது!
சில கணங்களில்
சிறகடித்துப்
பறந்தது!
விட்டுப்போன
சில விரிசல்களில்
ரணங்களாய் நிறைந்தது!
ஆயினும் காதலியே
காலம் வரும் வரை
காத்திரு கண்டிப்பாக
கரமிணைவோம்!

No comments: