Sunday, March 25, 2007

(புதிய தாலாட்டு) சமூகம்... ஜாக்கிரதை!

ஜாக்கிரதை..!

காந்தியாய் வாழ நினைப்பவர்களை
கோட்சேக்களாய் மாற்றி விடும்
கயவர்கள் நிறைந்திருக்கிறார்கள்!

ஜாக்கிரதை..!

புத்தனாய் இருக்க நினைப்பவர்களை
பித்தனாய் மதிக்கும்
எத்தர்கள் நிறைந்திருக்கிறார்கள்!

ஜாக்கிரதை..!

வறுமைக்கு ஆட்பட்டவர்களை
கொடுமைக்காரர்களாய் மாற்றும்
வஞ்சகர்கள் நிறைந்திருக்கிறார்கள்!

எண்ணிய முடிக்கப் பிறந்த
திறன் மிக்க என் கண்ணே
ஏய்க்கும் உலகில் நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
ஜாக்கிரதை..!

No comments: