Wednesday, May 9, 2007

காதலியே...


தெருக்குழாயில்
நீர் வரும்போதெல்லாம்
என் இதயம் துளிர்க்கும்
நீயும் வருவாயென...
நீர் சுமந்து நீ இடறினால்
என் இதயம் துடிக்கும்
உனக்கு வலிக்குமென...
உனக்குத் தெரியுமா?
நீ வராத இரு நாட்களில்
குழாய் நீரும் குழம்பியிருந்தது
என்னைப் போலவே...
எவர் எதிர்த்தாலும் பரவாயில்லை
தயவு செய்து- நீ மட்டும்
நிறுத்தி விடாதே!
நீர் சுமப்பதையும்...
நான் சுவாசிப்பதையும்...

1 comment:

rahini said...

நீயும் வருவாயென...
நீர் சுமந்து நீ இடறினால்
என் இதயம் துடிக்கும்
--------------------
என்னை கவர்ந்த வரிகள்

காலம் வரும் வரை காத்திருப்பது தான் காதல்

தீராத தேடல் அத்வைதம் ஒன்றுதான்