Thursday, May 31, 2007

காப்பாத்து...

குளத்திலும் கிணற்றடியிலும்
தாராளமாக குளித்ததாக
பாட்டி சொல்லியிருக்கா...
மூன்று குடம் தண்ணீர் விட்டு
முழுதாக குளித்ததாக
அம்மா சொல்லியிருக்கா...
இப்படிச் சொல்லிய...
இருவரும்...
என்னைக் குளிப்பாட்ட
ஒரு சிறிய சில்வர் அடுக்கு
தண்ணீருக்கே..
போராட வேண்டியிருக்கிறதாம்..
மூன்றாம் உலகப்போரும் வரலாமாம்
தண்ணீருக்காக...
கடவுளே...வாழ்வின் அடிப்படை ஆதாரமான
தண்ணீரை பாதுகாக்க வேண்டிய..
அறிவினை மனிதருக்கு வழங்கி..
தண்ணீர் கஷ்டம் வராமல் காப்பாத்து..!

1 comment:

raghaven said...

this what going to happen for the next genaration.