Monday, May 14, 2007

ஜோக் சொல்லப்போறேன்-8

ஒரு பள்ளிகூடத்தில்... ஒரு மாணவன் பையிலிருந்து பாட்டில் எடுத்து தண்ணீர் குடித்தான்.குடிக்கும் போது வாயில் வைத்து எச்சில் படுத்தி குடித்தான், அதைப் பார்த்த ஆசிரியர்,

"தம்பி எச்சில் பண்ணி குடிக்ககூடாது அண்ணாந்துதான் குடிக்கணும் அதுதான் நல்ல பழக்கம்"என்றார்
அதற்கு அந்த மாணவன்,
"நீங்க சொல்றது சரிதான் சார் ஆனாலும் இப்படி குடிப்பதில் ஒரு நன்மை இருக்கு!"
என்றான்.
ஒன்றும் புரியாத ஆசிரியர்,
"நன்மையா? என்ன நன்மை?"
என்று கேட்டார்.

"குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுன்னு யாரும் கேக்க மாட்டாங்க பாருங்க"
என்று சொன்னதும் அதிர்ந்து போனார் ஆசிரியர் .

No comments: