Friday, May 4, 2007

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

கொஞ்சம் வித்தியாசமா...

தாயிற்சிறந்த கோயிலுமில்லை...
தந்தை சொல் மிக்க மந்திரமில்ல..
ஆயினும் எப்பொழுதும் தந்தை ஏன்
தாயின் நாமத்தை உச்சரிக்கிறார்
விடாமல் நச்சரிக்கிறார்...
அன்பால் அர்ச்சிக்கிறார்...
தந்தையும் தாயினுள் அடக்கம் என்பதாலோ?


********
தந்தைக்கு தலைச்சன்
தாய்க்கு இளையோன்
தவிர்க்காமல்
கொள்ளி போடணும்...
என்று சிலர் சொன்னதாக
கா(த்)தோரச் செய்தி கேட்டேன்
ஆயினும்...
அப்பா! அவசரப்பட்டு...
இறந்து விடாதீர்கள்..!
இறுதிக்கடமையை செய்ய...
நான் வந்து விடுகிறேன்!
வந்தவுடன் உயில் எழுதிவிடலாம்...
என்கிற பாசம் மகனுக்கு வருவது...
தந்தை செலுத்தியதற்கு பிரதி பலன்.
********
மாற்றாந்தாயென்றால்
சித்தியென்றுதான்
கேள்விப்பட்டோம்
அந்த சித்திகளுக்குத்தான் வரும்
மாற்றாந்தாய் மனப்பான்மை
சொந்தத் தாய்க்கு
மாற்றாந்தாய் மனப்பான்மை
உள்ளதாக கேள்விப்பட்டதில்லை..
அந்த சித்திகள் (மாற்றாந்தாய்கள்) உருவாக
காரணமாக இருப்பவர் ஒரு தந்தைதான்
சோ தந்தையை விட தாயே உயர்ந்தவர்
********

3 comments:

S Murugan said...

super...super

rahini said...

சிந்திக்க வைக்கும் சிந்தனைகள்.

Balamurali said...

முருகன் மற்றும் ராகினி அவர்களுக்கு மிக்க நன்றி!