காப்பாத்து...

Posted by
Balamurali
at
4:46 PM
1 comments
Labels: கவிதைகள்
படிக்கும் போதும் -படித்து
Posted by
Balamurali
at
4:52 PM
1 comments
Labels: கவிதைகள்
(இறப்பிலும் பிரியா காதல் ஜோடியில் ஒன்று இறக்குமென்றால்
இன்னொன்றின் நிலை இது)
காவல்தெய்வமாகிவிட்டாய்... நீ
ஆனாலும்
காப்பதற்கு என்னை வைத்தாய்...
காத்திருந்தேன் காதலையும்
காலத்தையும்..
காத்திருக்கிறேன்... இப்போதும்..
ஆனாலும்...
காலனுடன் கொண்ட கூட்டணியால்
காவல் தெய்வமாகிவிட்டாய்..நீ
Posted by
Balamurali
at
10:03 PM
0
comments
Labels: கவிதைகள்
கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சேனுங்க...
எல்லா மனிதர்களுக்கும்
உணவு தேவைகளுக்கு
தன்னையே களமாக்கி
உருவாக்கிக் கொடுக்கும்
பேதமறியாத ...
பூமித்தாய்!
Posted by
Balamurali
at
4:09 PM
0
comments
Labels: கவிதை மாதிரி...
இது கொஞ்சம் புதுசுங்க...
சுட்டது மாதிரிதான் ஆனாலும் எஃப்.எம்.ரேடியோவில் கேட்ட ஒரு விஷயத்தின் உருமாற்றம்...
ஒரு பையன் அப்பகிட்ட வந்து மார்ஷீட்டைக் காட்டினான்.
அதைப் பார்த்த அப்பா"என்னடா இது வெறும் 10 மார்க்தான் வாங்கியிருக்கே"ன்னு கோபமா கேட்டாருங்க..
அதுக்கு அந்தப் பையன்
"இந்த மாதிரியெல்லாம் மாத்தி மாத்தி பேசாதீங்கப்பா..
போனவாட்டி 25 மார்க் எடுத்தப்போ என்ன சொன்னீங்க?"
"என்ன சொன்னேன்? ம் இன்னும் 10 மார்க் எடுத்திருந்தா பாஸ் ஆகியிருக்கலாம்னு சொன்னேன். அதுக்க்கென்ன இப்போ?"
"அப்படி சொல்லிட்டு இப்ப மாத்தி பேசலாமா அப்ப எடுக்க வேண்டிய 10 மார்க்கைதான் இப்போ எடுத்திருக்கேன்.அதுக்கு பாராட்டாம திட்டறீங்களே இது நியாயமா"ன்னு கேட்டான்
ஆடிப்போயிட்டாரு அப்பா பையனின் புத்திசாலித்தனத்தில்..
(இதுவும் புதுசுங்கோ:பறக்கும் விமானத்தின்மேல் உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்)
Posted by
Balamurali
at
3:55 PM
0
comments
Labels: ஜோக் சொல்லப்போறேன்
கிளை
நான் நீரில் நீந்துகையில்
கிளை என்று எண்ணி
அமர வந்தாயோ
என் கையில்...
தத்துபித்துக் கவிதை... வளர்வதற்க்கான முயற்ச்சி...
மகிழ்ச்சியுடன்,
தீபா சத்யா!
Posted by
Balamurali
at
3:49 PM
9
comments
Labels: கவிதைகள்
ஒரு பள்ளிகூடத்தில்... ஒரு மாணவன் பையிலிருந்து பாட்டில் எடுத்து தண்ணீர் குடித்தான்.குடிக்கும் போது வாயில் வைத்து எச்சில் படுத்தி குடித்தான், அதைப் பார்த்த ஆசிரியர்,
Posted by
Balamurali
at
7:07 PM
0
comments
Labels: ஜோக் சொல்லப்போறேன்
நண்பா!
நீ இருப்பதானால்
நான் வருந்துவதில்லை
எதற்கும்...
எனக்கு எல்லாம் வல்ல
ஒரு சகோதரன் இருப்பதாக..
Posted by
Balamurali
at
6:37 PM
0
comments
Labels: கவிதைகள்
முதலில் சொன்னது போலவே இது தோணினாலும்... இது வேற நிஜமான கற்பனைங்க.
எனக்கு வராத எஸ்.எம்.எஸ்.
------------------------------------
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
என்ன... தேடறீங்க..?
அதான் தலைப்பிலேயே போட்டிருக்கேனே...
வராத எஸ்.எம்.எஸுன்னு...
ஹி... ஹி...
Posted by
Balamurali
at
2:35 PM
4
comments
Labels: எனக்கு வராத எஸ்.எம்.எஸ்.
பொதுவாக ஒருவர் அனுப்பும் எஸ்.எம்.எஸ். வந்து விடுவதுதான் வழக்கம்.
ஆனா எனக்கு ஒருவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ். வரவேயில்லீங்க...
அது ஏன்? காரணம் தெரிஞ்சவங்க சொல்லுங்க....
சரி வராத மெஸேஜ் என்னன்னு சொல்லணுமில்ல...
என் மீது ரொம்ப அக்கறையுள்ள ஒரு ஜீவன் எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக சொன்னதும் என்னவாக இருக்கும்னு நான் நினைச்சது அப்படியே இருந்தது அவங்க சொன்னபோது!!!!!!
மெஸேஜ்:
கவனமாக இருக்கவும்!
உடல் நலனை கவனித்துக் கொள்ளவும்.
நேரத்துக்கு சாப்பிடவும்.
நேரத்துக்கு உறங்கவும்.
நல்ல இசை கேட்கவும்.
இதாங்க அது
அது எப்படிங்க நான் நினைச்சதே அவங்களும் சொன்னாங்க?
சரி
அந்த அவங்க யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?
சாரி அதுதான் சஸ்பென்ஸ்.
அவங்க விருப்பப்பட்டா அப்புறம் தனி பதிவா போடறேன் சரியா?
Posted by
Balamurali
at
2:16 PM
0
comments
Labels: எனக்கு வராத எஸ்.எம்.எஸ்.
ஆசைப்பட்ட
எல்லாத்தையும்
காசிருந்தா
வாங்கலாம்...
அம்மாவை
வாங்க முடியுமா...
அன்பை வாங்க முடியுமா...
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
Posted by
Balamurali
at
12:07 PM
1 comments
சும்மா ஒரு விசிட் பண்ணி பாருங்க
http://groups.google.com/group/Piravakam?hl=en
Posted by
Balamurali
at
5:18 PM
0
comments
தெருக்குழாயில்
நீர் வரும்போதெல்லாம்
என் இதயம் துளிர்க்கும்
நீயும் வருவாயென...
நீர் சுமந்து நீ இடறினால்
என் இதயம் துடிக்கும்
உனக்கு வலிக்குமென...
உனக்குத் தெரியுமா?
நீ வராத இரு நாட்களில்
குழாய் நீரும் குழம்பியிருந்தது
என்னைப் போலவே...
எவர் எதிர்த்தாலும் பரவாயில்லை
தயவு செய்து- நீ மட்டும்
நிறுத்தி விடாதே!
நீர் சுமப்பதையும்...
நான் சுவாசிப்பதையும்...
Posted by
Balamurali
at
7:07 PM
1 comments
Labels: கவிதைகள்
செயலினைக் கொண்டே
மதிக்கப்படும்
உன் வாழ்வு..!
வாழும் போதும்
வாழ்க்கைக்குப் பின்னும்...
Posted by
Balamurali
at
10:50 AM
0
comments
Labels: கவிதைகள்
மறந்தேன் என்றே
நினைத்தாயோ..?
மறப்பேன் என்றே
நினைத்தாயோ..?-உன்னை
மறுப்பேன் என்றே
நினைத்தாயோ..?
அல்லது மறக்காமல்தான் -என்னை
நினைத்தாயோ..?
Posted by
Balamurali
at
6:01 PM
1 comments
Labels: கவிதைகள்
இதயத்தில் விழுகின்றன
சம்மட்டி அடிகளாய்
உன் சூடான சொற்கள்
Posted by
Balamurali
at
5:59 PM
0
comments
Labels: கவிதைகள்
நீ காட்டும் அன்புக்கு
நிகரில்லை எதுவும்
இவ்வுலகில்..
நீயே அன்னையாய்
அமைந்திட வேண்டும்
எல்லா பிறப்பிலும்...
Posted by
Balamurali
at
5:26 PM
0
comments
Labels: கவிதைகள்
கொஞ்சம் வித்தியாசமா...
தாயிற்சிறந்த கோயிலுமில்லை...
தந்தை சொல் மிக்க மந்திரமில்ல..
ஆயினும் எப்பொழுதும் தந்தை ஏன்
தாயின் நாமத்தை உச்சரிக்கிறார்
விடாமல் நச்சரிக்கிறார்...
அன்பால் அர்ச்சிக்கிறார்...
தந்தையும் தாயினுள் அடக்கம் என்பதாலோ?
Posted by
Balamurali
at
12:02 PM
3
comments
Labels: கவிதைகள்
தாய் மனமே...
ஈடு இணையில்லா...
அன்பின் வடிவம்!
மாற்றுக்குறையா...
கருணையின் ஊற்று!
அலுத்துக் கொள்ளாத...
சேவையின் சிகரம்!
Posted by
Balamurali
at
12:31 PM
0
comments
Labels: கவிதைகள்
New Delhi |