Saturday, January 13, 2007

மழலையின் சிரிப்பில்...!



ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணலாம்...
மழலையின் சிரிப்பில்
சொர்க்கத்தைக் காணலாம்!
நிலவு தோன்றினால்
குளிர்ச்சி தோன்றும்...
மழலை தோன்றினால்
மகிழ்ச்சி தோன்றும்!
கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்...
மழலையின் தரிசனம்
மாறாத ஆனந்தம்!
பூக்கள் மலர்ந்தால்
புவி மலரும்...
மழலைகள் மலர்ந்தால்
மனிதம் தழைக்கும்!
பூக்கும் மலர்களை நிலவுக்கு சூட்டுவோம்!
பூத்த மழலைகளை
வாழ்த்தி போற்றுவோம்!

No comments: