Wednesday, December 20, 2006

மனிதன் மட்டும்...

*கூவும் குயில்கள்
பாராட்டிற்காக
பரிதவிப்பதில்லை...
*பொழியும் மேகம்
புகழுக்காக
ஏங்குவதில்லை...
*இரவும் பகலும்
எந்தப் பலனும்
பார்ப்பதில்லை...
*அலையும் கடலும்
கடமையைச்செய்ய
வருந்துவதில்லை...
*தாவர வகைகள்
தம் உழைப்பிற்கு
விருதுகள்தேடுவதில்லை...
*ஆனால்...
மனிதன் மட்டும்
எதிர் பார்ப்பின்றி
எதையும் செய்ய
முயல்வதில்லை...!

No comments: