Wednesday, December 20, 2006

கடைசி ஆசை...!

தாத்தா காலந்தொட்டு...
நூற்றியெட்டு வயதைக் கடந்து...
தன்னைக் கடந்து செல்வோருக்கெல்லாம்
இளைப்பாறுதல் கொடுத்து...
காற்றின் நாதத்திற்கும்...
ஆற்றின் தாளத்திற்கும்
தலையசைத்து,கீத
ம் இசைத்து...
பள்ளிக் குழந்தைகளின்
விளையாட்டுக் களமாகி...
பறவைகளின் உறைவிடமாகி...
விழுதுகளால் -தன் உறுதியினை
பறை சாற்றியஆலமரம்!
புதிய தொழிற்சாலைகட்டுவதற்காக...
வெட்டப்படும் வேளையில்...
தனது கடைசி வேண்டுகோளை
தெரிவித்தது!
"மனிதா!
சுற்றுச்சூழலைகாப்பாற்று!"

No comments: