Saturday, December 23, 2006

மறைமலை அடிகளார்

மறைமலை அடிகளார்
***************************

தாய் மொழிக்கென்று
பெரும்பணி செய்து
தமிழ் மொழி தன்னை
உயர்ந்திடச் செய்தீர்!

பெயருக்கென்றே
பேசி விடாமல்
பெயரினைக் கூட
தமிழினில் ஏற்றீர்!

உம்மால் தமிழும்
ஒருங்கே ஊரும்
பெருமிதத்தாலே
உயர்ந்தத்ய்யா!

உவகையில் நானும்
அகமகிழ்கின்றேன்
உமது மண்ணில்
வாழுவதாலே!

No comments: