Friday, August 15, 2008
Sunday, April 13, 2008
Friday, April 11, 2008
பட விளக்கம்
“வெற்றி நடை” மாத இதழினை ஆபீஸர்ஸ் கிளப் செயலாளர் பி.எஸ்.என்.எல். விமலாதித்தன் வெளியிட மூத்த உறுப்பினர். கே.பி. ரெங்கசாமி பெற்றுக் கொள்கிறார். அருகில் ஆசிரியர் பாலமுரளி, ஆபிஸர்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர்.
Posted by
bala murali
at
11:18 AM
0
comments
வெற்றி நடை- மாத இதழ் வெளியீட்டு விழா
இதழ் வெளியீட்டு விழா!
கரூர் ஆபீஸர்ஸ் கிளப் சார்பில் “வெற்றி நடை” மாத இதழ் வெளியீட்டு விழா நடை பெற்றது. விழாவுக்கு துணைத்தலைவர் ஆடிட்டர்.ஆர்.பழனிசாமி தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் கரூர் ஹேண்ட்லூம் சிட்டி தலைவர்.எஸ்.கே.டி.எம்.கருப்பசாமி மற்றும் ஆடிட்டர் வி.சுப்புராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் இதழை ஆபீஸர்ஸ் கிளப் செயலாளர் பி.எஸ்.என்.எல்.விமலாதித்தன் வெளியிட மூத்த உறுப்பினர் கே.பி. ரெங்கசாமி பெற்றுக் கொண்டார்.
விழாவில் ஆசிரியர் நாகை.எஸ்.பாலமுரளி, இணையாசிரியர் எஸ்.தேவராஜன், டெக்ஸ்ட்ரானிக் டெக்ஸ்டைல் சாஃப்ட்வேர் நிறுவன விற்பனைப் பிரதிநிதி எம்.பழனி, இதழ் வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் திருமதி.எஸ்.பார்வதி, எஸ்.ஹரிஹரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆபீஸர்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஆசிரியர் பாலமுரளி நன்றி கூறினார்
Posted by
bala murali
at
11:14 AM
0
comments
Sunday, March 2, 2008
அட... வந்துட்டோம்ல....
அருமை
---------------
எதுவும் இருக்கும் போது
யாருக்குமே புரிவதில்லை
அதன் அருமை
இழக்கும்போது புரியும் அளவுக்கு...
**********************
உடல் வருத்தினாலும்..
உள்ளத்தின் வலிமை
வெற்றி தரும்!
நம்பிக்கைகள் வெற்றி பெற்றால்
வாழ்வே வண்ணமயமாகும்!
நல்ல சிந்தனைகள்...
நல்ல லட்சியங்களைத் தரும்!
நல்ல லட்சியங்கள்..
நல்ல வெற்றிகளைத் தரும்!
நல்ல வெற்றிகள்...
நல்ல வாழ்வினைத் தரும்!
வலி
--------
மனசு
வலிக்கத்தான் செய்தது
மரணிக்கும் உணர்வுகளோடு
கழிந்து போன வேலையில்லாத
நாட்களில்....
***********
நினைவுகள்
----------
என்றுமே மறப்பதில்லை...
சில நேரங்களில்..
மறைக்கப்படும்..
பாசாங்காக...
என்றுமே மரணிப்பதில்லை...
சில பொழுதுகளில் மரத்துப்
போவதுண்டு...
வலியினால்...
என்றுமே நிலைப்பதில்லை
சில சந்தர்ப்பங்களில்
நிலையாமை கொண்டு..
கலையும் கனவுகள்போல
போலியாக பதிவு செய்யும்
நினைவுகள்..
**********
Posted by
bala murali
at
2:10 PM
0
comments